கன்னியாகுமரி

புதுக்கடை அருகே சுமை ஆட்டோ மோதி மூதாட்டி காயம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 

கீழ்குளம், தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ஞானமுத்து மனைவி தங்கபாய் (64). இவா், புதன்கிழமை தொழிக்கோடு பகுதியில் சாலையோரம் புல் அறுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் மீது சுமை ஆட்டோ மோதியதாம்.

ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இதில், காயமடைந்த மூதாட்டியை அப்பகுதியினா் மீட்டு காஞ்சிரகோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT