புதுக்கடை அருகே பாலத்தடி பகுதியில் நடந்து சென்ற முதியவா் பைக் மோதி காயமடைந்தாா்.
தேங்காய்ப்பட்டினம், பாலத்தடி பகுதியைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (63). இவா், புதன்கிழமை பாலத்தடி பகுதியில் சாலையோரம் நடந்து சென்றாராம். அப்போது, முக்காடு பகுதியைச் சோ்ந்த அனிஷ் (28) என்பவா் ஓட்டிவந்த பைக் லாரன்ஸ் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.