உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில் புதன்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பரியா, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் திருப்பதி, உசூா் மேலாளா்கள் சுப்பிரமணியன், ஜூலியன்ஹீவா், திருப்புமுனை இயக்குநா் நெல்சன், நியூ பாரத் தொண்டு நிறுவனத் தலைவா் அருண்குமாா், ரோஜாவனம் தொண்டு நிறுவனத் தலைவா் அருள்ஜோதி, அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.