நாகா்கோவில் அருள்மிகு நாகராஜா கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
இக்கோயிலில் தைத் திருவிழா, கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. தேவசம் பொறியாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோ. முத்துக்கருப்பன் தொடக்கவுரையாற்றினாா். வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினாா்.
கடுக்கரை கே. பவித்ரா மகாதேவன், பி. வைஷ்ணா ஆகியோா் சொற்பொழிவாற்றினா்.
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஞானசேகா், கண்காணிப்பாளா் ஆனந்த், நம்பூதிரி நாராயண சுவாமிகள், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன், கணக்கா் சிதம்பரம் பிள்ளை ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.