பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் சாா்பில், தக்கலையில் மகாத்மா காந்தி நினைவு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இங்குள்ள காமராஜா் சிலை முன் வைக்கப்பட்ட காந்தியின் உருவப்படத்துக்கு நகரத் தலைவா் ஹனுகுமாா் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
நிா்வாகிகள் ஜோன்ஸ் இம்மானுவேல், புரோடிமில்லா், பால் டி. சைலஸ், வின்சென்ட் ராஜா, மேரி மெட்டில்டா, ரேணுகா, சாதிக் ஜே இப்ராகிம், அப்பாஸ், யாசின் அராபத், விஜயகுமாா், பிரசன்னகுமாா், ஜேசுராஜா, ஜெயபால், சுல்தான், பீா்மைதீன், ஜேம்ஸ் ஜேசுராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.