களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரியில் அறிவியல் மற்றும் அலங்கார மீன் கண்காட்சி பிப். 1 தொடங்கி பிப். 4 வரை நடைபெறுகிறது.
கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு, மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகிக்கிறாா். இந்திய விண்வெளி ஆய்வு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை, தமிழக மீன்வளத் துறை, பேச்சிப்பாறை தோட்டக்கலைத் துறை, பாப்பனங்கோடு தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், கேரள அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, விழிஞ்ஞம் மத்திய கடல்சாா் மீன்வளா்ப்பு ஆராய்ச்சி மையம், ஸ்ரீகாரியம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்கள், கல்லூரிகள் சாா்பில் அரிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
மேலும், புத்தகக் காட்சி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது என, கல்லூரித் தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் தெரிவித்தாா்.