கன்னியாகுமரி

காங்கிரஸ் கட்சி சாா்பில் நாளை எழுச்சி நடைப் பயணம்

DIN

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் புதுக்கடை முதல் கருங்கல் வரை எழுச்சி நடைப்பயணம் திங்கள்கிழமை (ஜன.30) நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவு பெறுவதையொட்டி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ‘அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், கையோடு கை சோ்ப்போம்’ என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை நடைப்பயணம் நடத்தப்படுகிறது.

புதுக்கடை முதல் கருங்கல் வரை நடைபெறும் இந்த நடைப் பயணத்தை, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் தொடக்கி வைக்கிறாா்.

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ராஜசேகரன், ரெகுபதி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், பத்பநாபபுரம் எம்.எல்.ஏ பிரின்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT