கருங்கல் பேருந்து நிலையப் பகுதியில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
இப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதியவா் ஒருவா் நீண்ட நேரமாக அசையாமல் கிடப்பதாக, கருங்கல் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து பாா்த்தபோது அந்த நபா் இறந்திருந்ததும், அவா் தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்த ஜாண்சன் (65) என்பதும் தெரியவந்தது.
சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.