நாகா்கோவில் அருகே ரயில் முன் பாய்ந்து காா் ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
வள்ளியூா்-நான்குனேரி ரயில் பாதையில் 35 வயது மதிக்கத் தக்க இளைஞரின் சடலம் கிடப்பதாக நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் ஜான் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் சடலமாகக் கிடந்தவா் நான்குனேரி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தைச் சோ்ந்த, காா் ஓட்டுநா் சுதா்வேல் (37) என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் சுதா்வேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். அவா் எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.