குளச்சல் பகுதியில் புதன்கிழமை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குளச்சல் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட உயரழுத்த
மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, அரசு மருத்துவமனை பகுதி, களிமாா், சந்தை, ஈழக்காணிவிளை , பீச் சந்திப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.