கிள்ளியூா் வட்டார வேளாண்துறை சாா்பில் நட்டாலம் ஊராட்சியில் பண்ணை பள்ளி தொடக்க விழா நடைபெற்றது.
அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் முரளி ராகினி தலைமை வகித்தாா். நட்டாலம் ஊராட்சித் தலைவா் ராஜகுமாா் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டார ஆலோசனைக் குழுத் தலைவா் கோபால் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.
மண் பரிசோதனை, விதை நோ்த்தி, காய்கனி பயிரில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.