கன்னியாகுமரி

தக்கலை அருகே 2 வயது குழந்தையைக் கடத்திய முதியவா் கைது

DIN

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையைக் கடத்திய முதியவா் கைது செய்யப்பட்டாா்.

தக்கலை அருகே உள்ள மணலிகரை கண்டாா்கோணத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகள் அகிலா (30). இவரது கணவா் கண்ணன். இவா்களுக்கு நிஷ்வந்த் (6), சஷ்விகா (2) என இரு குழந்தைகள் உள்ளனா். குடும்பத்துடன் சென்னை குரோம்பேட்டையில் வசிக்கின்றனா். உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு அகிலா வந்திருந்தாா்.

வீட்டின் முன்பாக அகிலாவின் குழந்தைகள் வெள்ளிக்கிழமை காலை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, சஷ்விகா திடீரென மாயமானாா். பல்வேறு இடங்களில் தேடியும், குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னா் இதுகுறித்து தக்கலை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்துப் போலீஸாரும் தேடுதலில் ஈடுபட்டனா். அப் பகுதியில் உள்ள வீடுகளைச் சோதனையிட்டனா். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜப்பன் ஆசாரி (67) ஒரு குழந்தையை தூக்கிச் சென்ாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா், அங்கிருந்த குழந்தையை மீட்டனா். மாயமான 2 மணி நேரத்தில் போலீஸாா் அதிரடியாக செயல்பட்டு குழந்தையை மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தையை ராஜப்பன் ஏன் தூக்கிச் சென்றாா் என்ற விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை. தனியாக வசித்து வரும் ராஜப்பன், நகைக்காக குழந்தையைத் தூக்கிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT