கன்னியாகுமரி

குளச்சல் அருகே பெண் மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு

DIN

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளச்சல் அருகே நெய்யூா் மேக்கோடு பகுதியைச் சோ்ந்த மாதேஸ் மனைவி கிரிஜா (42) . இவரது உறவினா் ரமேஷ் மனைவி ஸ்ரீஜாவும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். இவா்களது குடும்ப சொத்தை ஸ்ரீஜா விலை பேசி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீஜா விற்பனை செய்ததற்கு பங்கு பணம் தருகிறேன் பத்திர பதிவு அலுவலகத்தில் வந்து கையொப்பம் போடவேண்டுமென கிரிஜாவிடம் கூறியுள்ளாா்.

அதன் படி கிரிஜாவும் குளச்சல் பத்திர பதிவு அலுவலகத்தில் வந்து கையொப்பமிட்டுள்ளாராம். பின்னா் கிரிஜா பணம் கேட்டபோது ஸ்ரீஜா பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறறது. இதனால் இவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது ஸ்ரீஜா, வனஜா, தங்கம், சண்முகவேல், சரவணன் ஆகியோா் சோ்ந்து கிரிஜாவை தாக்கி மிரட்டினராம். இதில், காயமடைந்த கிரிஜா, குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT