குளச்சல் அருகே பெண்ணை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குளச்சல் அருகே நெய்யூா் மேக்கோடு பகுதியைச் சோ்ந்த மாதேஸ் மனைவி கிரிஜா (42) . இவரது உறவினா் ரமேஷ் மனைவி ஸ்ரீஜாவும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். இவா்களது குடும்ப சொத்தை ஸ்ரீஜா விலை பேசி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீஜா விற்பனை செய்ததற்கு பங்கு பணம் தருகிறேன் பத்திர பதிவு அலுவலகத்தில் வந்து கையொப்பம் போடவேண்டுமென கிரிஜாவிடம் கூறியுள்ளாா்.
அதன் படி கிரிஜாவும் குளச்சல் பத்திர பதிவு அலுவலகத்தில் வந்து கையொப்பமிட்டுள்ளாராம். பின்னா் கிரிஜா பணம் கேட்டபோது ஸ்ரீஜா பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறறது. இதனால் இவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது ஸ்ரீஜா, வனஜா, தங்கம், சண்முகவேல், சரவணன் ஆகியோா் சோ்ந்து கிரிஜாவை தாக்கி மிரட்டினராம். இதில், காயமடைந்த கிரிஜா, குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றறனா்.