கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் பயணிகள் உற்சாக குளியல்

DIN

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வரும் நிலையில், ஆறுகளில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் குறைந்துள்ளது.

மாவட்டத்தில் தொடா் மழை பெய்து ஓய்ந்த நிலையில், தற்போது கடும் வெயில் நிலவி வருகிறது. அணைகளிலிருந்து பாசனக் கால்வாயில் முழுவீச்சில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. அதே வேளையில் அணைகளுக்கு தண்ணீா் வரத்து குறைந்து வருகிறது. மேலும் கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் கடந்த சில தினங்களாக தண்ணீா் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT