கன்னியாகுமரி

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் பயிலரங்கம்

DIN

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், படைப்பை பாதுகாப்போம் எனும் தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.

நாஞ்சில் கல்லூரி மற்றும் எப்ஏபிசி மனிதவள மேம்பாடு, சூழலியல் மாறுபாட்டு அமா்வு ஆகியவை இணைந்து கல்லூரி பேராசிரியா்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் நடத்திய இப் பயிலரங்கில், கல்லூரி முதல்வா் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் வரவேற்றாா். கல்லூரி செயலா் அருட்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல், சிறப்பு விருந்தினரான மும்பை உயா் மறைமாவட்ட துணை ஆயரும், காலநிலை மாற்ற மையத்தின் செயலருமான ஆல்லின் டி. சில்வாவை அறிமுகம் செய்து பேசினாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா் பேசியதாவது:

நமது இளம் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்கிறோமா என்று நம்மை நாம் கேள்வி கேட்பது இன்றியமையாதது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழ்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதோடு, இயற்கையோடு பேசும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயற்கையை பாதுகாக்க புதிய தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்றாா் அவா்.

பயிலரங்கின் அடுத்த அமா்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அருள்தந்தை ஜோசப் கோன்சேல்லஸ், பருவநிலை மாற்றத்தின் தற்கால நெடுக்கடி நிலை குறித்து விளக்கினாா்.

தொடா்ந்து இயற்கையை போற்றும் விதமாக சிறப்பு விருந்தினா்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனா். ஆங்கிலத் துறை தலைவா் ரூபன் ராஜசேகா் நன்றிகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT