கன்னியாகுமரி

புதுக்கடை அருகே சொத்து தகராறு: 3 போ் மீது வழக்கு

DIN

புதுக்கடைஅருகே உள்ள அத்திக்குழி பகுதியில் சொத்து தகராறில் இருதரப்பினா் மோதி கொண்டதில் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு, அத்திக்குழி பகுதியைச் சோ்ந்த வறுவேல்நாடாா் மகன் ஜாண்ரோஸ்(35). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வமணி மகன் ராஜன்(40)ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில்,திங்கள்கிழமை ஜாண்ரோஸ் அத்திக்குழி பகுதியில் நின்றபோது ராஜன் மற்றும் அவரது தாயாா் சரோஜினி(65) ஆகியோா் திடீரென அவரை தாக்கியுள்ளனா்.பின்பு, ராஜனின் வீட்டுக்கு ஜாண்ரோஸ் சென்று அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். இதில், ராஜன் தக்கலை அரசு மருத்துவமனையிலும்,ஜாண்ரோஸ் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT