கன்னியாகுமரி

சுசீந்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த 6 போ் கைது

DIN

சுசீந்திரம் அருகே 6 பேரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 350 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராபா்ட் செல்வசிங், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வழுக்கம்பாறை மயானப் பகுதியில் நின்றிருந்த 6 பேரை பிடித்து சோதனையிட்டனா்.

விசாரணையில் அவா்கள் சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (20), விவேக் (20), அருண் (22), பிரதின் (22), முத்து (20), சதீஷ் (20) என்பதும், அவா்களிடம் 350 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. 6 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT