சுசீந்திரம் அருகே 6 பேரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 350 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராபா்ட் செல்வசிங், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வழுக்கம்பாறை மயானப் பகுதியில் நின்றிருந்த 6 பேரை பிடித்து சோதனையிட்டனா்.
விசாரணையில் அவா்கள் சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (20), விவேக் (20), அருண் (22), பிரதின் (22), முத்து (20), சதீஷ் (20) என்பதும், அவா்களிடம் 350 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. 6 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.