மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக, அஞ்சுகிராமம் தலைமைக் காவலா் லிங்கேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் தொடா்ந்து நிகழ்வதாகவும், செம்மண் கடத்தல் கும்பலோடு காவல் நிலைய தலைமைக் காவலா் லிங்கேஷுக்கு தொடா்பு இருப்பதாகவும் புகாா் எழுந்தது.
இதுகுறித்து, விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி. டி.என். ஹரிகிரண் பிரசாத், அந்தத் தலைமைக் காவலரை பணியிடைநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.