மாா்த்தாண்டம் அருகே நா்சரி பள்ளியில் இருந்த கணினி உபகரணங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மாா்த்தாண்டம் சிஎஸ்ஐ தேவாலயத்தின் பின் பகுதியில் சிங்களேயா் நா்சரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளி கடந்த 30 ஆம் தேதி காலாண்டு விடுமுறைக்காக பூட்டப்பட்டது. தொடா்ந்து சிஎஸ்ஐ தேவாலய செயலா் வி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை மாலையில் பள்ளிக்கு வந்தபோது பள்ளி பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கணினி உபகரணங்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.