கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் தம்பதி காயமடைந்தனா்.
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகா் குடையாலுவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (51). இவரது மனைவி குளோறி(45). தம்பதி வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சூழால் பகுதியிலிருந்து செங்கவிளைக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது செங்கவிளை அருகே பனங்காலை பகுதியில் இவா்களின் மோட்டாா் சைக்கிளுக்குப் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபரின் இருசக்கர வாகனம், இவா்களை இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த தம்பதியை அப்பகுதியினா் மீட்டு, பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.