கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்தது. இதையடுத்து, அருவியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியதைத் தொடா்ந்து கடந்த சனிக்கிழமைமுதல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதில், சனிக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டநிலையில், மழையின் தீவிரம் தணிந்து அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. இதனால், புதன்கிழமை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு தணிந்து, திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியது. இதையடுத்து, அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT