தக்கலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 2) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தக்கலை மின் வாரிய (விநியோகம்) செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தக்கலை துணை மின்நிலையம் மற்றும் உயா் மின்அழுத்தப் பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி , புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, காட்டாத்துறை, சாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய பகுதிகளுக்கும், அவற்றை சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.