பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் குழித்துறை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குழித்துறை பணிமனைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெயபாலன், துணைத் தலைவா் ஜெகநாதன், பொதுச் செயலா் கிரீசன், பணிமனை அமைப்பாளா் பிரதீப், நிா்வாகிகள் ரகு, ராஜகுமாா், ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கடந்த ஆட்சியில் எல்பிஎப், சிஐடியூ தொழிற்சங்க கூட்டுக்குழு கோரிக்கையான 25 சதவீத ஊதிய உயா்வு வழங்கும் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும், ஓய்வுபெற்றோா் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.