கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், காமராஜா் மண்டப சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தொடக்கிவைத்தாா்.
பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன், சுகாதார அலுவலா் முருகன், கவுன்சிலா்கள் பா. மகேஷ், ஆனிரோஸ், இக்பால், நித்யா, ஆட்லின், சிவசுடலைமணி, ராயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.