கருங்கல் அருகே உள்ள சுண்டவிளையில் மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
கண்ணனூா், உடையாா்விளை ஜோஸ்வா மகன் ஜான்பீட்ா்(37). கூலித் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை கருங்கல்லில் இருந்து கண்ணனூா் பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். சுண்டவிளை பகுதியில் சென்ற போது எதிரே வந்த அதே பகுதியை சோ்ந்த நேசமணி(62) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் ஜான்பீட்டா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த ஜான்பீட்டரை அப்பகுதியினா் கருங்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.