நாகா்கோவிலில் திமுக அரசை கண்டித்து, பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிமை நடைபெற்றது.
வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் ஜெகநாதன், வினோத், சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தை எம். ஆா்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினாா்.
மாவட்டப் பொருளாளா் பி.முத்துராமன், துணைத் தலைவா்கள் எஸ்.பி. தேவ், சொக்கலிங்கம் அமைப்புச் செயலா்கள் கிருஷ்ணன், கிருஷ்ணகுமாா் மாநகர பாா்வையாளா்கள் அஜித்குமாா், நாகராஜன் மாநகராட்சி உறுப்பினா்கள் சுனில், ரமேஷ், அய்யப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதில் திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.