அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகஸ்தீசுவரம் சந்திப்பில் மாணவா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா் பிரவின் ஜெயகுமாா் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் செயலா் ஸ்ரீனிவாசன், அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன், பேரூா் காங்கிரஸ் தலைவா் கிங்ஸ்லி உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.