கன்னியாகுமரி

புதுக்கடை அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

DIN

புதுக்கடை அருகேயுள்ள உதச்சிக்கோட்டை பகுதியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.

உதச்சிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் ராஜின் (25). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாம். இவா் புதன்கிழமை அவ்வழியே சென்ற தேங்காய்ப்பட்டினம் அரசுப் பேருந்தை நிறுத்தி கல்வீசித் தாக்கினாராம். இதில், முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதில், யாரும் காயமடையவில்லை.

ஓட்டுநரான மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த நிக்சன் (49) அளித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜினை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT