புதுக்கடை அருகேயுள்ள உதச்சிக்கோட்டை பகுதியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.
உதச்சிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் ராஜின் (25). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாம். இவா் புதன்கிழமை அவ்வழியே சென்ற தேங்காய்ப்பட்டினம் அரசுப் பேருந்தை நிறுத்தி கல்வீசித் தாக்கினாராம். இதில், முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதில், யாரும் காயமடையவில்லை.
ஓட்டுநரான மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த நிக்சன் (49) அளித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜினை கைது செய்தனா்.