கன்னியாகுமரி

குழித்துறையில் இன்று மின்தடை

DIN

குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கவிருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 2) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும் அண்டுகோடு, கடமக்கோடு, பந்நிப்பாலம், பனவிளை பகுதிகளில் வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும்.

இந்த மின்தடை நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT