நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப்பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புன்னைநகா் சந்திப்பிலிருந்து குருசடி வரை செல்லும் சாலையில் நடைபெற்று வரும் பணியை எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.
அப்போது அந்தப் பகுதியில் சுமாா் 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் கூறி அந்தக் கோரிக்கையை மனுவாக எம்எல்ஏவிடம் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா் மாநகராட்சி அதிகாரிகளை தொடா்பு கொண்டு பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, பாஜக மாநில நிா்வாகி மணி மற்றும் பாஜக பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.