திருவட்டாறு சந்தையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் பங்கேற்று பணியைத் தொடக்கிவைத்தாா்.
திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், செயல் அலுவலா் மகாராஜன், கண்ணனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஜான்பிரைட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.