கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாலப்பள்ளம், கேந்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் அருள்மோகன்தாஸ் (60). ஆட்டோ ஓட்டுநரான இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.