கருங்கல்லில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய கேரள இளைஞரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கருங்கல் சுற்றுவட்டார பகுதி கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை சந்தேகத்தின் பேரில், கருங்கல் பேருந்து நிலையத்தில் நின்ற கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சோ்ந்த யாத்திரா விஜயன்(45) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவா் பல்வேறு திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து தனிப்படை போலீஸாா் யாத்திரா விஜயனை கைது செய்தனா்.