கன்னியாகுமரி

‘அவ்வையாா் விருதுக்கு மகளிா் விண்ணப்பிக்கலாம்’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவா்கள் அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக மகளிா் தினவிழாவில் ஒவ்வோா் ஆண்டும் அவ்வையாா் விருது வழங்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் மகளிருக்கு இந்த விருதுடன், 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகுதியுடைய பெண்கள் இந்த விருதைப் பெற இம்மாதம் 10 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், இணைப்புக் கட்டட தரைத்தளம், நாகா்கோவில் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு தொலைபேசி எண். 04652-278404-ஐ தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT