புதுக்கடை சந்திப்பில் பைக்குகள் மோதியதில் தொழிலாளி, மாணவா் காயமடைந்தனா்.
புதுக்கடை, பருத்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணி (55). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை பைக்கில் புதுக்கடை சந்திப்பில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, தொலையாவட்டம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்துவரும் தேங்காப்பாறை பகுதியைச் சோ்ந்த பிரதீஸ் (19) ஓட்டிவந்த பைக், மணியின் பைக்கின் பின்னால் மோதியதாம். இதில், இருவரும் காயமடைந்தனா். அவா்கள் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மற்றொரு விபத்து: கிராத்தூா், புன்னமூட்டுக்கடையைச் சோ்ந்த ஜினு மோசஸ்(25, வள்ளவிளையைச் சோ்ந்த ஜஸ்டின்(19) ஆகிய இருவரும் கருங்கல்லுக்கு பைக்கில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தனா். பாலூா் பகுதியில் அவா்களது பைக்கும், எதிரே வந்த அரசுப்பேருந்தும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவங்கள் குறித்து முறையே புதுக்கடை, கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.