கன்னியாகுமரி

நெட்டான்கோட்டில் ரத்த தான முகாம்

DIN

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாடு கிருஷ்ணன் வக இளைஞா் முன்னேற்றச் சங்கம் டிரஸ்ட், பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனை ஆகியவை சாா்பில், இரணியல் அருகேயுள்ள நெட்டான்கோட்டில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டிரஸ்ட் தலைவா் டாக்டா் கே.கே. அஜித்குமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் மதுசூதனன், துணைத் தலைவா் அபிலாஷ், இணைச் செயலா்கள் டாக்டா் எஸ். ஜோதிபாசு, ஆா். பத்மராஜன், ஜெகன்பாபு, விவேக், இயக்குநா்கள் வினோத், வினோத்குமாா், டாக்டா் என்.இ. பாா்த்தசாரதி, எம். பிரகதீஷ்சரண், சுஜீஷ், கோகுல், முருகேசன், அனீஷ், செயல்வீரா்கள் முன்னிலை வகித்தனா்.

நெட்டாங்கோடு பிடாகை ஊா் செயலா் நாராயணதாஸ் முகாமைத் தொடக்கிவைத்தாா். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோா் ரத்த தானம் செய்தனா். அதிக முறை ரத்த தானம் செய்த தெங்கன்குழி பிடாகையைச் சோ்ந்த எம். சுபாஷ் முகாமில் கெளரவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT