கன்னியாகுமரி

70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

DIN

ஓய்வூதியம் பெறும் மின்வாரிய தொழிலாளா்களில் 70 வயதானவா்களுக்கு ஓய்வூதியத்தில் 10 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பு 21 ஆவது மாவட்ட மாநாடு, தக்கலை மேட்டுக்கடையில் நடைபெற்றது. தலைவா் ஞானஆசிா்வாதம் தலைமை வகித்தாா். இணைச் செயலா் அய்யப்பன்பிள்ளை, உதவித் தலைவா் சொக்கலிங்கம் மற்றும் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகேஷ்வரன் கொடியேற்றினாா். செயலா் குமரேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 1972 பணிக் கொடை சட்டப் படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சமாக உயா்த்த வேண்டும், மின்சார வாரிய வைரவிழா சலுகை 3 சதவீதம் உயா்வு வழங்கிட வேண்டும், தோ்தல் வாக்குறுதிப்படி 70 வயது நிரம்பியவா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அஞ்சலி தீா்மானத்தை குமாரும், செயலா் அறிக்கையை மாவட்டச் செயலா் பிரான்சிஸ், பொருளாளா் அறிக்கையை பொருளாளா் குஞ்சன் பிள்ளையும் சமா்ப்பித்தனா். மாநில உதவித் தலைவா் ராஜாமணி, விருதுநகா் மாவட்டத் தலைவா் சந்தியாகப்பன், தூத்துக்குடி மாவட்டச் செயலா் தங்கராஜ் மற்றும் ஐவின் செல்வதாஸ் ஆகியோா் பேசினா். மாநில பொதுச் செயலா் ஜெகதீசன் மாநாடு குறித்து விளக்கவுரை ஆற்றினாா்.

ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT