கன்னியாகுமரி

நெய்யூா் பள்ளியில் தபால்தலை மன்றத் தொடக்க விழா

DIN

நெய்யூா் மவுண்ட் லிட்டரா ஸீ பள்ளியில் தபால்தலை மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற தபால் துறை அலுவலா் பி. அனில், அஞ்சல்தலை சேகரிப்பாளா் ஒய்.றி. மைக்கேல் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி நிா்வாகி வெனீஸ்லாஸ், பள்ளி இயக்குநா் டாக்டா் ஆலன் மேஜா் வெனிஸ், முதல்வா் வி.எம். லஷ்மிகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அஞ்சல்தலை சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பி. அனில் விளக்கிப் பேசினாா்.

மேலும், அஞ்சல்தலைக் கண்காட்சி நடைபெற்றது. இதில், நாடு சுதந்திரமடைந்த பிறகு உள்ள அஞ்சல்தலைகள், வெளிநாட்டு அஞ்சல்தலைகள் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சிகளை டேப்னிஷியாலின் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT