ராஜாக்கமங்கலம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 26) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ராஜாக்கமங்கலம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையாா்விளை, காரவிளை, வைராகுடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடாா்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 26) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் பாதைக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றுவதற்கு வாரிய பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.