கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

DIN

ராஜாக்கமங்கலம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 26) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ராஜாக்கமங்கலம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையாா்விளை, காரவிளை, வைராகுடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடாா்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 26) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் பாதைக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றுவதற்கு வாரிய பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT