லீபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆரோக்கியபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
194 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. லீபுரம் ஊராட்சித் தலைவா் ஜெயக்குமாரி லீன், முகாமைத் தொடங்கிவைத்தாா். அகஸ்தீசுவரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் டேனியல், வினோத், குமாரசாமி மருத்துவமனை செவிலியா்கள், டெங்கு விழிப்புணா்வு குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.