கன்னியாகுமரி

சாமிதோப்பில் கலிவேட்டை

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப்பதியில் தைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலிவேட்டை நடைபெற்றது.

சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டுதோறும் தை, வைகாசி மற்றும் ஆவணி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தைத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதானம், வாகன பவனி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கலிவேட்டை: 8ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அய்யா அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்து இரவு 7.30 மணிக்கு முத்திரிக்கிணற்றின் அருகில் கலிவேட்டையாடினாா்.

பின்னா் செட்டிவிளை, சாஸ்தான் கோயில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் உள்ளிட்ட ஊா்களுக்கு ஊா்வலமாகச் சென்றாா்.

அப்போது ஏராளமான பக்தா்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனா்.

தோ்திருவிழா: 9ஆம் நாள் திருவிழாவான சனிக்கிழமை மாலை அய்யா அனுமன் வாகனத்திலும், 10ஆம் நாள் திருவிழாவில் அய்யா இந்திர வாகனத்திலும் பவனி நடைபெறும்.

11ஆம் நாள் திருவிழாவான 25 ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT