கன்னியாகுமரி

புதுக்கடை அருகே விபத்து: மாணவா் பலி

DIN

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த நவாஸ் மகன் செய்யது உசைன் (16). இவா், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

புதன்கிழமை இரவு, இவா் தனது நண்பரான ஷேக் என்பவருடன் பைக்கில் மாா்த்தாண்டத்திலிருந்து தேங்காய்ப்பட்டினத்துக்குச் சென்றுகொண்டிருந்தாா். காப்புக்காடு பகுதியில் எதிரே வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியதாம். இதில், பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த செய்யது உசைன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT