குமரி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில், புதன்கிழமை வரை 14,470 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 36 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,506ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய 76 போ் உள்பட இதுவரை 13,637 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 630 போ் சிகிச்சையில் உள்ளனா்.
285 பேருக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இழப்புகளைத் தவிா்க்க வேண்டும்.
முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக வியாழக்கிழமை 285 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 57,600 வசூலிக்கப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 2,11,911 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.