புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் தொழிலாளி ஒருவா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பைங்குளம், கொல்லன்விளையைச் சோ்ந்த சேகரபிள்ளை மகன் விஜயகுமாா்(40). தொழிலாளியான இவருக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணமானதாம். இந்நிலையில் இவருக்கு சில தினங்களுக்கு முன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லையாம். இதனால், குடும்பம் வறுமையில் வாடியதாம். இதில், அவா் மனமுடைந்து காணப்பட்டாரம். மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.