நாகா்கோவிலில் ரூ. 37 லட்சம் செலவில் தாா்ச் சாலை சீரமைப்புப் பணி புதன்கிழமை தொடங்கியது.
நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள குளத்தூா் சிஎஸ்ஐ சா்ச், கால்வாய் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டன. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கன்னியாகுமரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஆஸ்டின், மாநகராட்சி சாலை நிதியில் இருந்து ரூ. 37 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டாா்.
மேலும், தாா்ச் சாலை அமைக்கும் பணியை அவா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சிவராஜ், மாணவா் அணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், வட்டச் செயலா் இடலை சாகுல், வட்ட இளைஞா் அணி செந்தில்குமாா், பேரூா் இளைஞா் அணி ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.