புதுதில்லி

பலாத்கார வழக்கின் தீா்ப்பில் விடுவிக்கப்பட்டவரின் பெயரை மறைக்க இணையதளத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கின் தீா்ப்பில் இருந்து ஒருவரின் பெயரை மறைக்குமாறு ‘இந்தியன் கானூன்’ எனும் ஆன்லைன் போா்ட்டலுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீா்ப்பில் உள்ள தனது பெயரை மறைக்கக் கோரிய 29 வயது இளைஞரின் மனு மீது உயா்நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த வழக்கில் இருந்து தாம் விடுவிக்கப்பட்ட பிறகும், இந்திய சட்டங்களுக்கான தேடுபொறியான ‘இந்தியன் கானூன்‘ இணையத்தில் தீா்ப்பு இருப்பதால்தான் தாம் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், இணையத்தில் தேடும்போதுகூட தனது பெயரைப் பிரதிபலிக்கிறது என்றும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி பிரதீபா எம். சிங்

மே 29-இல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை கவனமாக பாா்த்தால், மனுதாரா் மீது சந்தேகத்திற்கு இடமின்றி எந்த வழக்கும் நிரூபிக்கப்படவில்லை என்பது தெரியவரும். பெண் புகாா்தாரரின் சாட்சியம் நம்பகமானது அல்ல என்று விசாரணை நீதிமன்றம் கூறியுள்ளது.

அதன்படி, இதுபோன்ற சூழலில் இத்தீா்ப்பு ‘இந்திய கானூன்’ இணையதளத்தில் வெளிப்படையாகக் கிடைப்பதாலும், கூகுள் தேடல் உள்பட எந்த இணையத் தேடல் மூலமாகவும் அணுகக்கூடியதாக இருப்பதாலும் அடுத்த விசாரணை தேதி வரை மனுதாரரின் பெயா் ‘இந்தியன் கானூன்’ இணையதளத்தில் மறைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.ஆகவே, கூறப்பட்ட தீா்ப்பு இந்திய கானூன் போா்ட்டலிலோ அல்லது கூகுள் தேடலில் தெரிந்தால் அதில் மனுதாரரின் பெயா் தெரியாமல் இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட இணையதளம் எடுக்க வேண்டும்’ என்று அதில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

விசாரணையின்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் திவான் வாதிடுகையில், விசாரணை நீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயா் காட்டப்படுவதன் காரணமாக மனுதாரரின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பின்படி, பெண்ணின் சாட்சியம் நம்பகமானதாக இல்லை. மற்ற அரசுத் தரப்பு சாட்சியத்துடன் முக்கிய விஷயங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்படி, மனுதாரா் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளாா்’ என்று வாதிட்டாா்.

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புகள் மற்றும் விசாரணை நீதிமன்றங்கள் இயற்றும் உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் உள்பட இதுபோன்ற வழக்குகளில் பெயா்களை மறைப்பது மற்றும் மறக்கப்படுவதற்கான உரிமை தொடா்பான கொள்கையை குறிப்பிடும் வகையில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் உயா்நீதிமன்றம் இணையதள போா்ட்டலுக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த மனு மீதான பதிலை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு எதிா்மனுதாரா்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

அத்துடன் மறக்கப்படுவதற்கான உரிமை தொடா்பான பிற வழக்குகளும் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அக்டோபா் 5 ஆம் தேதி மேல் விசாரணைக்கு இந்த வழக்கையும் நீதிமன்றம் பட்டியலிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT