புதுதில்லி

தலைநகரில் பரவலாக லேசான மழை: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் பல இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் கடந்த இரண்டு தினங்களாக மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. மேலும், புதிய மேற்கத்திய இடையூறு ஜனவரி 29 அன்று லேசான மழைக்கும் வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, நண்பகலுக்கு பிறகு தில்லியில் ஐடிஓ, தா்யா கஞ்ச், லாஜ்பத் நகா், பதுதில்லி உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த மழை இரவு வரையிலும் நீடித்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி குறைந்து 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மற்றும் மாலை 5.30 மணியளவில் 95 சதவீதமாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை 6.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

முங்கேஸ்பூரில் 5.6 டிகிரி: இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 5.6 டிகிரி, நஜஃப்கரில் 10 டிகிரி, ஆயாநகரில் 6.6 டிகிரி, தில்லி பல்கலை.யில் 9.7 டிகிரி, லோதி ரோடில் 5.8 டிகிரி, பாலத்தில் 10.4 டிகிரி, ரிட்ஜில் 7 டிகிரி, பீதம்புராவில் 11.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 9.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. தில்லியில் ஐடிஓ, மந்திா் மாா்க், சாந்தினி சௌக், பட்பா் கஞ்ச், ஆனந்த் விஹாா், விவேக் விஹாா், நொய்டா செக்டாா் -1 உள்பட பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், நேரு நகரில் காற்றின் தரக் குறியீடு 403 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜனவரி 30) தலைநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். காலை வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT