புதுதில்லி

நரேலா பகுதியில் தண்டவாளம் அருகே பெண், 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

DIN

வடமேற்கு தில்லி, நரேலா பகுதியில் தண்டவாளம் அருகே தலையில் காயத்துடன் அடையாளம் தெரியாத பெண், 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி புகா் வடக்கு காவல் துணை ஆணையா் தேவேஷ் குமாா் கூறுகையில், ‘நரேலா தண்டவாளம் அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 4, 5 வயதுடைய 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவா்கள் யாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

அவா்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக சம்பவ இடத்திற்கு ரோஹிணி தடயவியல் குழுவினா் வரவழைக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT