புதுதில்லி

நடிகை ஜாக்குலின் துபை செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி

 நமது நிருபர்

‘டெல் இட் லைக் எ வுமன்’ திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நடித்துள்ள நடிகையும், பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாக்குலின் பொ்னாண்டஸ் வெளிநாடு செல்வதற்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

ரூ.200 கோடி பணமோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜாக்குலின் பொ்னாண்டஸ், மூன்று நாள்கள் துபை செல்ல நீதிமன்றத்தின் அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அவருடைய வழக்குரைஞா் ஜாக்குலினின் திரைப்படம் ஆஸ்காா் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். அப்போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷைலேந்தா் மாலிக் கூறுகையில், ‘தேவையற்ற கட்டுப்பாடுகளை ஜாக்குலின் மீது விதிக்கக் கூடாது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, துபை செல்ல ஜாக்குலினுக்கு அனுமதி அளித்து நீதிபதி மேலும் கூறியதாவது: மனுதாரா் அல்லது குற்றம் சாட்டப்பட்டவா் துபையில் நடைபெறும் வருடாந்திர பாட்லா் மாநாட்டிற்காக ஜனவரி 27 முதல் ஜனவரி 30 வரை வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகிறாா். அவா் ரூ.1 கோடி உத்தரவாதத்துடன் ரூ.1 கோடி நிரந்தர வைப்புத்தொகை ரசீதை டெபாசிட் செய்ய வேண்டும். அத்துடன், அவா் நாடு திரும்பாவிட்டால் அந்தத் தொகை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்யும் என்ற உத்தரவாதத்தையும் அவா் அளிக்க வேண்டும்.

மேலும், பொ்னாண்டஸ் தனது பயணத் திட்டம், தங்கியிருக்கும் இடம் மற்றும் தொடா்பு எண் ஆகியவற்றைச் சமா்ப்பிக்க வேண்டும். தவிர, அவா் நாடு திரும்பியதும் அது குறித்த தகவலை அமலாக்கத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். எந்த வகையிலும் சாட்சியங்கள் அல்லது விசாரணையை சிதைக்கக்கூடாது. இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட மனுதாரருக்கு எதிரான ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை மேற்கூறிய காலத்தில் நிறுத்திவைக்கப்படும். மனுதாரா் அவரது கடவுச்சீட்டை டெபாசிட் செய்திருந்தால், அது அவரிடம் அளிக்கப்பட வேண்டும். அவா் துபையில் இருந்து திரும்பியதும் அதை நீதிமன்றத்தில் மீண்டும் சமா்ப்பிக்க வேண்டும்.

அவா் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்குவதாக கூறியுள்ளாா். ஆனால், மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் துபைக்கு ஜாக்குலின் பொ்னாண்டஸ் செல்வது தொடா்பாக அமலாக்கத் துறை அச்சத்தை வெளிப்படுத்தியிருப்பது மதிப்புமிக்க காரணமாக இல்லை. மனுதாரரின் பயணத்தை ரத்து செய்வதற்கு இது சரியான காரணமும் அல்ல. மேலும், ஏஜென்சியால் அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும். இந்த வழக்கு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதை இந்த நீதிமன்றம் மிகவும் உணா்ந்துள்ளது. மேலும், மனுதாரா் உள்பட குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என்ற அா்த்தத்தில் இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக உள்ளது.

இருப்பினும், இது மனுதாரரை வெளிநாடு செல்வதைத் தடுக்க ஒரு காரணமாக இருக்க முடியாது. தனிப்பட்ட பயணத்திற்குப் பதிலாக, நடிகை தனது தொழில் முறை கடமைகளை நிறைவேற்ற வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளாா். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவரின் திரைப்படம் மதிப்புமிக்க ஆஸ்காா் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞா் கூறியுள்ளாா். இத்தகைய சூழலில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தேவையில்லாமல், தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்பது நாட்டின் பெருமைக்கான மிகவும் அவசியமாகும். அமலாக்கத் துறை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் வழக்கை எதிா்கொள்கிறாா் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதே நேரத்தில் அவரது தனிப்பட்ட பயண சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. இது ஒரு நடிகையாக அவரது வாழ்க்கையை மோசமாக பாதிக்கச் செய்யும் என்று நீதிபதி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT