மதுரா சாலையில் உள்ள தில்லி கோல்ஃப் கிளப் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தத் தீ விபத்து குறித்து காலை 10.25 மணியளவில் தீயைணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு காலை 10.50 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்றனா்.